Tuesday, January 1, 2013


உன் நட்பின் மடியில்
உறங்க ஆசை...
விடியும் வரை அல்ல
உயிர் பிரியும் வரை...

Monday, March 12, 2012

மனைவி

என்னோடு தான்
உறங்குகின்றாள்
எனக்கு முன்பே
விழித்து விடுகிறாள்
அவள் தூங்கியதை
இதுவரை பார்த்தில்லை
நான்

எனக்கு பிடித்ததை
எல்லாம்
அறிந்தும் புரிந்தும்
செய்து தருகிறாள்
அவளுக்கு பிடித்தது
எது ?
இதுவரை கேட்டதில்லை நான்

விக்கல் வந்தால்
தண்ணீர் தருகிறாள்
அவளுக்கு விக்கல் எடுத்து
பார்த்ததில்லை இதுவரை

கூப்பிட்டால்
குளித்து வருகிறாள்
போதுமென்றால்
தள்ளி படுக்கிறாள்
அவளுக்கு அது தேவையா
கேட்டதில்லை

கோபம் கொண்டால்
அமைதியாய் இருக்கிறாள்
ஆனால்
அவள் கோபப்பட்டு
பார்த்தில்லை நான்

நான் பேசினால்
பேசுவாள்
அழுதால்
அழுவாள்
சிரித்தால்
சிரிப்பாள்

அவளுக்கென்று ஒர் உணர்வில்லையா
உணர்ந்து பார்த்தால்
வலிக்கிறது என் இதயம்...

ம்ம்ம்ம்
மீண்டும் ஓர் ஜென்மம்
பிறக்க வேண்டும்
நானும் அவளும்
இடம் மாறி பிறக்க வேண்டும்... 

Monday, May 23, 2011

காதல்...

உன்னுடைய தலையணையாய்
நான் இருந்திருக்கக் கூடாதா..?
உன் அரவணைப்பு
கதகதப்பு எல்லாம்
எனக்கு தினமும்
கிட்டியிருக்குமே..!   

Tuesday, April 19, 2011

காதல்...




சுத்த சைவம் நான்..!
நினைவில் கூட
அசைவத்தை
நினைத்துப் பார்த்தில்லை
உன் செவ்விழ்களைக்
கண்டதிலிருந்து
அசைவம்
சாப்பிடத் தோன்றுகிறது
எனக்கு..!


அப்பாவின் வலி

பிரசவ அறைக்குள்
அம்மா படும்
அவ்வளவு வலிக்கும்
நிகராகவே உள்ளது
வெளியில்
எதிர்பார்ப்பு
ஏற்படுத்தும்
அப்பாவின் வலி

அம்மாவின் வலி
சப்தங்களால் அழுத்தமாய்
பதிவு செய்யப்டுகிறது
அப்பாவின் வலியோ
மவுனத்துக்குள் புதைந்து
அமிழ்கிறது

அம்மாவுக்காக
வருத்தப்பட
ஏராளமானோர் உள்ளனர்
அப்பாவுடன்

அப்பாவின் வலிக்காக
வருந்திடத்தான்
அப்பாகூட இல்லை
அப்பாவுடன்

Monday, March 7, 2011

அம்மா

மனித இனத்தில்
தானும் பிறக்க எண்ணி
ஒவ்வொரு வீட்டிலும்
பிறந்தான் இறைவன்
அம்மாவாக.

எல்லோரும்
விழிக்கும் முன்பே விழித்து
சூடாக தேநீர் தருவாள்
அம்மா.
அந்தச் சுவையான தேநீருக்காகவே
தாமதமாக எழுவார்கள் பிள்ளைகள்.

கால்சட்டைப் பருவத்தில்
சிறுவன்;
மீசை முளைத்த பருவத்தில்
வாலிபன்;
காலம் வெவ்வேறு பெயர்களால்
அழைக்கிறது;
எப்பொழுதும் அம்மாவுக்கு
"சின்னக்குட்டி".

நட்சத்திரங்கள் எல்லாம்
கண்சிமிட்டி ரசிக்கிறது
அம்மாவின் தாலாட்டுப்பாடலை.

தூரலில் நனைந்தால்
துவட்டிக்கொள்ள துண்டாகும்;
கால் இடறி நகம் பெயர்ந்தால்
காயத்தை சுற்றிக்கொள்ள துணியாகும்;
அழுகின்ற பொழுதில் கண்ணீர்
துடைக்கும் கைகளாகும்;
உன் சேலைக்குத்தான் எத்தனை எத்தனை
உருவங்கள்.

வாழ்க்கை உன் மீது
சுமத்துகின்ற வலிகளுக்கெல்லாம்
புன்னகை மட்டுமே பரிசாய்
தருகின்ற வித்தை எங்கு கற்றுக்கொண்டாய்
அம்மா?

கருவில் என்னை
சுமந்த உன்னை
கருவிழியில் சுமந்திட
அனுமதிப்பாயா அன்னையே.

Sunday, February 13, 2011

எனது காதலிக்கு....

தினந்தோறும்
சுடிதார் அணிந்து வரும்
நீ அன்று
டீ சர்ட் ஜின்ஸில்
தோழிகளுடன்
பேசிக்கொண்டிருந்தபோது
என்னை பார்த்தும்
தலை குனிந்து
வெட்கபட்டாயே
ஞாபகமிருக்கிறதா..........

எனது காதலிக்கு....

எங்கள்
இடத்திற்கு வந்து
என்
அண்ணை பார்த்து
இது யார் என்று கேட்க
என் தம்பி
என்று அவன் கூற
என்னை அப்போது தான்
பார்ப்பது போல்
அப்பாவியாக பார்த்து சிரித்தாயே
ஞாபகமிருக்கிறதா.........

எனது காதலிக்கு....

நீ
உன் தோழிகளிடம்
ஆங்கிலத்தில்
பேசிக்கொண்டிருந்தபோது
என்னை பார்த்ததும்
தமிழில்
பேச ஆரம்பித்தாயே
ஞாபகமிருக்கிறதா.....

எனது காதலிக்கு....

உனக்கு பிடித்த
டென்னிஸ் பற்றியும்
எனக்கு பிடித்த
கிரிக்கெட் பற்றியும்
உனக்கு பிடித்த
விஜய் திரிஷா பற்றியும்
எனக்கு பிடித்த
சூர்யா ஜோதிகா பற்றியும்
வெகுநேரம் பேசுவோமே
ஞாபகமிருக்கிறதா..

எனது காதலிக்கு....

கடற்கரை மணலில்
கடலலை ஓரத்தில்
பொரித்த மீன்களை
ஆளுக்கு பாதியாக
சாப்பிட்டோமே
ஞாபகமிருக்கிறதா...

எனது காதலிக்கு....

உன் வீட்டிலிருந்து
பால் பாயாசம்
கொண்டு வந்தாயே
அதை நான்
சாப்பிட்டு விட்டு
உன்னை
ஆஹா  ஒஹோ
என பாராட்ட
அனைத்தும் கேட்டுவிட்டு
அதை செய்தது
என் அக்கா என்றாயே
ஞாபகமிருக்கிறதா....

தாஜ்மகால்

தாஜ்மகால்
காதலின் சின்னம்
யார் சொன்னது...?
தன் மனைவியின்
பிரசவ கஷ்டத்தை
நேரில் காணும்
எந்த கணவணும்
அடுத்த குழந்தைக்கு
தயராக மாட்டான்
ஆனால்
பாவம் மும்தாஜ்
அவளுக்கு 14 குழந்தைகளாம்
உண்மையில் தாஜ்மகால்
காதலின் சின்னம் அல்ல
ஒரு காதலின் சமாதி...

நீ எனக்கு வேண்டாமடி...

சைனாவுக்கு
போக வேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும்
என் தந்தை...
பக்கத்து தெருவுக்கு கூட
என்னை பைக்கிலே
போகச் சொல்கிறார்
அவரை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது..........

தேர்வு சமயங்களில்
இரவெல்லாம்
படித்து கொண்டிருப்பதோ நான்
விழித்து கொண்டிருப்பதோ
என் தாய்...
அவளை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது....

ஆபிசுக்கு செல்லும்
அண்ணனின்
அயர்ன் செய்த சட்டையை
நான் அணிந்து கொண்டாலும்
கோபப்படாமல்
ஆனந்த படுவானே
அவனை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது.......

நான்
பாக்கெட்மணி
கேட்கும்பொதல்லாம்
தான் நகை
வாங்க வைத்திருக்கும்
பணத்தை
புன்னகையோடு தருவாளே
என் தங்கை..
அவளை விட்டு விட்டா
உன்னோடு ஒடி வருவது...............

கோபத்தில்
தம்பியை அடித்துவிட
அது அப்பா வரும்
நேரம் என்பதால்
என்னை
காட்டிக்
கொடுக்காமல்
அழுகையை அடக்கிகொள்வானே
அவனை விட்டு விட்டா
உன்னோடு ஓடிவருவது.........

இப்படி எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவைக்கும்
நீ எனக்கு
    வேண்டாமடி...!

Wednesday, February 2, 2011

நட்பு

நாட்கள் நம்மை
கடந்து சென்றாலும்,
நட்பின் நினைவுகள்
நம்மை விட்டு
பிரிந்து செல்வதில்லை...

நட்பு

நிழல் கூட
வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்...
ஆனால்,
என்னுடைய அன்பு
உயிர் உள்ளவரை
துணையாய் வரும்....
உன்னோடு....

வியர்வை

தாமரையில்
தண்ணீர்த் துளிகள்
ஒட்டவே ஒட்டாது
என்பதுதானே
இயற்கையின் நியதி..!
பிறகெப்படி
உன் முகத்தில் மட்டும்
வியர்வைத் துளிகள்..!

அழகான கவிதை

உலகிலேயே மிகவும்
அழகான கவிதை
ஒன்று சொல்
என்றார்கள்..!
நான்
உன் பெயரை மட்டும்தான்
சொன்னேன்..!
அதற்கே அசந்து விட்டார்கள்..!

சிற்பி

இந்த உலகின்
மிகச்சிறந்த
சிற்பிகள் யார்..?
என்று போட்டி வைத்தால்
முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்
பெண்ணே..!